Thursday 20 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 09

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்    
நன்னெறி யாவது நமச்சி வாயவே

பொருள்:

முன்னெறி - முதல் நெறி / தலைசிறந்த வழி
நெறி - வழி.
சிவபெருமான் காட்டிய அவரின் நெறியே சிறந்த வழியாகும். அந்த வழியை தேர்ந்தெடுத்தோமானால், முக்திப் பெறுவது உறுதி (திண்ணம்).

அவ்வாறு, அந்த நெறியை தேர்ந்தெடுத்து, அப்பிரானை அடைந்தவர்களுக்கு, நல்ல வழியாக துணை நின்றது, நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமே ஆகும்.

பாடல் கேட்க:
ராகம் - ஹிந்தோளம்.
தாளம் - ஆதி.

Check this out on Chirbit

No comments:

Post a Comment