Friday 14 October 2016

நமிச்சிவாயப் பதிகம் - 06

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே

பொருள்:

சலமிலன் - சலம் இலன் - சலனங்கள் இல்லாதவன்.
சங்கரன் - நன்மை செய்யும் கரம் கொண்டவன்.

சலனமில்லாத, சங்கரன், தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே நன்மைகள் செய்வார். தன்னைச் சாரா நாத்திகர்களுக்கு (வேதத்தை த்வேஷிப்போர்க்கு) நன்மைகள் செய்ய மாட்டார்.

சிவனைச்சார்ந்தவர்கள், எப்படிப்பட்டவராக இருந்தாலும், அவரவர்க்கு எவ்வளவு நன்மை தர முடியுமோ அவ்வளவு நன்மைகளைக் கொடுப்பது, நம சிவாய என்ற ஐந்தெழுத்து.

பாடல் கேட்க:
ராகம் - அடாணா, தாளம் - ஆதி.


Check this out on Chirbit

No comments:

Post a Comment