வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே
பொருள்:
வெந்த நீறு அருங்கலம் விரதிகட்கு எலாம் - வெந்த நீறு - திருநீறு (அ) விபூதி. விரதம் மேற்கொள்பவர்க்கு அணிகலன், திருநீறு.
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம் - அந்தணர்களுக்கு அணி, அருமையான நான் மறை (வேதம்) மற்றும் அதன் அங்கங்கள் ஆறு (சிக்ஷை, கல்பம் , வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம்).
திங்களுக்கு அருங்கலம் திகழு நீண்முடி - திங்கள் - சந்திரன். நிலவுக்கு அணிகலன், சிவபெருமானின், நீண்ட முடி.
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே - நம் அனைவருக்கும் அணிகலன், நமசிவாய என்னும் திரு ஐந்தெழுத்தே ஆகும்.
பாடல் கேட்க:
ராகம் - ஸாமா, தாளம் - ஆதி
No comments:
Post a Comment