Thursday 29 September 2016

நமச்சிவாயப் பதிகம் - 03

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே

பொருள்:

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
- வானின் உயரத்திற்கு விறகுகள் அடுக்கி வைத்தாலும், அதனை உண்ணும் விதமாக ஒரு தீப்பொறி சென்றால், அனைத்தும் எரிந்து சாம்பாலாகி விடும்.

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்ச்சிவாயவே
- அதுபோல, இவ்வுலகினில் நாம் செய்த பாவங்கள் - வானளாவ அடுக்கிய விறகுகள். அப்பாவத்தை எரித்து அழிக்கும் தீப்பொறி - நமசிவாய என்னும் ஐந்தெழுத்தாகும்.

பாடல் கேட்க:
ராகம் - சரஸ்வதி, தாளம் - ஆதி.

Check this out on Chirbit

No comments:

Post a Comment