Tuesday 27 September 2016

நமச்சிவாயப் பதிகம் - 01

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

பொருள்:

சொற்றுணை வேதியன் - வேதத்தினை அறிய உதவும் (துணையாக) விளக்கமாக (பாஷ்யம்) இருப்வன் சிவபெருமான்.

சோதி வானவன் - எங்கும் பரவி ஒளிரும் சோதி வடிவானவன்.

பொற்றுணைத் திருந்தடி - பொற்றுணை - பொன் போன்ற, ஈடு இணையில்லா அல்லது அந்த திருவடிக்கு நிகர் அதுவே (இணையடிகள்)

பொருந்தக் கைதொழ - நாம் மனம் பொருந்தி கைதொழ, கைகூப்ப

கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் - கல் தூண் ஒன்றை நம்மோடு கட்டி, கடலில் நம்மை வீசி எறிந்தாலும்,

நற்றுணை ஆவது நமச்சிவாயவே - நமக்கு நல்ல துணையாக வருவது, நம்மைக் காப்பது நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரம்.

அப்பர் பெருமானை, சமணர்கள் கல் தூணோடு சேர்த்துக் கட்டி, கடலில் பாய்ச்சினார்கள். அவர் நமசிவாய மந்திரத்தின் துணைக்கொண்டு, பாதுகாப்பாக  கரை ஒதுங்கினார். சைவத்தை நிலைநாட்டினார். அந்த இடமே திருப்பாதிரிப்புலியூர்  எனப்படும் கடலூர் ஆகும். இப்பதிகத்தை பாடி அவர் கரைசேர்ந்தார் என்பது வரலாறு.

பாடல் கேட்க;
ராகம் - கமாஸ், தாளம் - ஆதி

Check this out on Chirbit

No comments:

Post a Comment