வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஒடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே
பொருள்:
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே
வீடினார் - வீட்டுப் பேறு அடைந்தனர்.
உலகினில் - உலகு இனி இல் (இல்லை) என்று உலகப்பற்றை விட்டனர்.
அதாவது, உலகம் இனி இல்லை என்று பற்றை விட்ட, சிறந்த தொண்டர்கள், வீடுப் பேற்றினை அடைந்தனர்.
அடியேனும், அவர்களோடே சேர்ந்து, அவர்கள் சென்ற வழியே சென்றேன். எம்பெருமானின் உருவை, அகக்கண்ணில் கண்டு மகிழ்வுற்றேன்.
நான் திருவைந்தெழுத்தை (நமசிவாய) நாடினேன். என்னையும் அந்தத் திருவைந்தெழுத்து நாடிற்று.
பாடல் கேட்க:
ராகம் - ரஞ்சனி
தாளம் - ஆதி
Check this out on Chirbit
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஒடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே
பொருள்:
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே
வீடினார் - வீட்டுப் பேறு அடைந்தனர்.
உலகினில் - உலகு இனி இல் (இல்லை) என்று உலகப்பற்றை விட்டனர்.
அதாவது, உலகம் இனி இல்லை என்று பற்றை விட்ட, சிறந்த தொண்டர்கள், வீடுப் பேற்றினை அடைந்தனர்.
அடியேனும், அவர்களோடே சேர்ந்து, அவர்கள் சென்ற வழியே சென்றேன். எம்பெருமானின் உருவை, அகக்கண்ணில் கண்டு மகிழ்வுற்றேன்.
நான் திருவைந்தெழுத்தை (நமசிவாய) நாடினேன். என்னையும் அந்தத் திருவைந்தெழுத்து நாடிற்று.
பாடல் கேட்க:
ராகம் - ரஞ்சனி
தாளம் - ஆதி
Check this out on Chirbit
No comments:
Post a Comment